ஆன்மிக களஞ்சியம்

கார்த்திகை விரதம்

மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர்.

மாலை மலர்

முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுவது.

மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வற்றில் தீபத் திருவிழா கொண்டாடப்படும் திருக்கார்த்திகை விரதம் மிக முக்கியமானதாகும்.

இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர்.

நாரத மகரிஷி 12 ஆண்டுகள் இந்த விரதமிருந்ததால், எல்லா முனிவர்களுக்கும் மேலான பதவி பெற்றார்.

இந்த நாளில் முருகனுக்குரிய பாராயண நூல்களான கந்தசஷ்டி கவசம்,

சண்முகக் கவசம் படிப்பதும், கந்தபுராணம் கேட்பதும் நல்லது.