ஆன்மிக களஞ்சியம்

காரடையான் நோன்பு

பெண்களின் திருமாங்கல்யத்தை காப்பதற்காக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.நோன்பு இருக்கும் தினத்தன்று காலையில் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம்.

மாலை மலர்

மாசி மாத ஏகாதசியில் வருகின்ற முக்கியமான நோன்பு காரடையான் நோன்பு.

பெண்களால் இந்த விரதம் மேற்கொள்ளப்படும்.

இந்த விரதத்தை கடைபிடிக்க ஒரு கலசத்தில் தேங்காயை வைத்து அதைச் சுற்றி மாவிலைகள் கொண்டு கட்ட வேண்டும்.

அந்த கலசத்தின் மேல் மஞ்சள் கயிறு கொண்டு கட்டி மஞ்சள், சந்தனம், குங்குமம் பூச வேண்டும்.

அலங்கரிக்கப்பட்ட கலசத்தை பூஜையறையில் வைத்து காமாட்சியம்மனை வேண்டிக் கொண்டு

நைவேத்தியம் படைத்து, தீபாராதனைகள் செய்து வணங்க வேண்டும்.

நைவேத்தியமாக பழம், பொரி, சுண்டல் வைக்கலாம்.

பெண்களின் திருமாங்கல்யத்தை காப்பதற்காக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

பூஜை முடிந்தவுடன் கார அடையுடன், ஜாக்கெட் பிட், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை

சுமங்கலிப் பெண்களுக்கு தந்து விட்டு அதன்பின்னர் கலசத்தில் கட்டிய மஞ்சள் கயிற்றை எடுத்து

விரதமிருந்த பெண் கட்டிக் கொள்ளலாம்.

நோன்பு இருக்கும் தினத்தன்று காலையில் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம்.