ஆன்மிக களஞ்சியம்

ஜோதி வழிபாட்டின் மகிமையை விளக்கும் கார்த்திகை விளக்கீடு

அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார். இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

மாலை மலர்

படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலை செய்யும் விஷ்ணுவும்

நானே பெரியவன் என்று வாதாடிப் போரிட்டனர்.

அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.

அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது.

இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று

விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார்.

இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.