நாகலாபுரம் தலம் 4 வேதங்களும் மீண்டும் திரும்ப கிடைக்கப்பெற்ற தலமாகும்.
எனவே இந்த தலம் ஞானம் தரும் தலமாக கருதப்படுகிறது.
அதை உணர்த்தும் வகையில் ஆலய பிரகாரத்தில் ஹயக்கிரீவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கல்வியில் குறை இருக்கும் மாணவர்கள் இங்கு வந்து ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பலன் பெறுகிறார்கள்.
குறிப்பாக பவுர்ணமி தினத்தன்று காலை 8 மணிக்கு ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் கல்வியில் மேன்மை பெறலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.