ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகின்ற உத்தர கோசமங்கையில் மட்டும் நான்கு தாண்டவம் முதல் தடவையாக ஆடி உள்ளார்.
அந்த நான்கு தாண்டவங்கள் வருமாறு:
(1) ஆனந்த தாண்டவம்
(2) சந்தியத் தாண்டவம்
(3) சம்விஹார தாண்டவம்
(4) ஊர்த்துவத் தாண்டவம் ஆகும்.
அடுத்து சிவபெருமான் சிதம்பரத்தில் ஆடிய தாண்டவம் மூன்று.
அவை
(1) திரிபுரந்தர தாண்டவம்
(2) புஜங்கத் தாண்டவம்
(3) லலிதாத் தாண்டவம் ஆகும்.
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று ஈசனின் நடனத்தை காண்பது விசேஷம்.