ஆன்மிக களஞ்சியம்

சந்திர பகவான் (திங்கள்)

சந்திரன் அத்திரி முனிவரின் புதல்வனாவார். இவர் தட்சனின் புதல்வியர்கள் 27 பேர்களை மணந்து கொண்டார்.

மாலை மலர்

சந்திரன் அத்திரி முனிவரின் புதல்வனாவான். இவன் தட்சனின் புதல்வியர்கள் 27 பேர்களை மணந்து கொண்டான்.

அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அன்பாயிருந்தமையால், தட்சனால் சபிக்கப்பட்டான்.

இதைத் தொடர்ந்து சிவபெருமானை பலதலங்களில் சென்று வழிபட்டு துன்பத்திலிருந்து விடுபட்டான்.

பிறகு தேவகுருவாகிய பிரகஸ்பதியினால் சபிக்கப் பெற்று சயரோக நோயினால் வருந்தினான்.

இதற்காக சிவபெருமானை சரண் அடைந்து நோய் நீங்கப் பெற்றான்.

அதுமட்டுமின்றி, சிவபெருமானது இடது கண்ணாகவும், திருமுடியில் திகழவும் பேறு பெற்றான்.

சந்திரன் வழிபட்ட சிவாலயங்கள்:

திருவெண்காடு,

மாந்துறை,

திருவாரூர்,

நெல்லிக்கா,

திருவலிதாயம்,

திருப்பழுவூர்,

திருப்புனவாயில்,

குடந்தைக் காரோணம்,

திங்களூர்,

மயேந்திரப்பள்ளி,

திருப்பனந்தாள்,

சீர்காழி,

திலதைப்பதி