ஆன்மிக களஞ்சியம்

சதுர்த்தி விரதம்

விநாயகரை சிறப்பாக பூசிக்கும் நாள் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி என்னும் நான்காம் நாள் ஆகும். விநாயக சதுர்த்தியில் விநாயகரை கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

மாலை மலர்

விநாயகரை சிறப்பாக பூசிக்கும் நாள் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி என்னும் நான்காம் நாள் ஆகும்.

அதற்கு விநாயகர் சதுர்த்தி என்று பெயராகும்.

வைகாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருப்பவர்களும் உண்டு.

கார்த்திகை மாதத் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்களும்

விநாயகர் விரதம் கொண்டாடுவார்கள்.

விநாயக சதுர்த்தியில் விநாயகரை கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

வீட்டிலேயே பூஜை செய்ய விருப்பமுள்ளவர்கள் பூஜை அறையில் சாணம், சந்தனம், வெல்லம், மஞ்சள், புற்று மண்

இவற்றில் ஏதேனும் ஒன்றில் விநாயகர் திருவுருவைப் பிடித்து வைத்துப் பூஜை செய்யலாம்.

இவ்வுருவங்கள் பூஜை முடித்த பின்னால் நீரில் விடுதல் வேண்டும்.