2008 ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் நுழைவாயிலில் 833/4 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது.
பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் முப்பது லட்சம் வழங்கியது.
பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் மீதமிருந்த செலவுகள் செய்யப்பட்டன.
திருக்கோவில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருக் குடமுழுக்கு விழா, புதிய இராஜகோபுரத்துடன் ஜூலை 11, 2014 இல் நடைபெற்றது.
பூஜை நேரம்
1. காலசந்தி காலை 7.00 மணி
2. உச்சிகாலம் நண்பகல் 12.00 மணி
3. சாயரட்சை இரவு 7.00 மணி
4. அர்த்த ஜாமம் இரவு 8.30 மணி