ஆன்மிக களஞ்சியம்

பைரவர் விரதம்

எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். அதிகாலையில் நீராடி பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும்.

மாலை மலர்

எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம்.

ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் எதுவுமில்லை.

குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.

அதிகாலையில் நீராடி பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும்.

பகலில் இரவில் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும்.

வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.