ஆன்மிக களஞ்சியம்

அழகெல்லாம் முருகனே!

முருகன் என்ற சொல்லுக்கு பொருள் அழகு என்பதாகும். முருகனையும் சிவந்தவன் என்னும் பொருளில் சேயோன், செவ்வேல் என்றெல்லாம் குறிப்பிடுவர்.

மாலை மலர்

முருகன் என்ற சொல்லுக்கு பொருள் அழகு என்பதாகும்.

நீலக்கடல் பரப்பில் இளஞ்சூரியன் தோன்றுவதை பார்க்க செக்கச்செவேல் என்றிருக்கும். கடல் நீரோ நீலவண்ணம் கொண்டிருக்கும்.

இந்த அழகுக்காட்சியைக் கண்டமக்கள், முருகு என்று சொல்லி மகிழ்ந்தனர்.

முருகப்பெருமானின் வாகனம் மயில். மயில் நீலநிறத்துடன் இருக்கும்.

முருகனையும் சிவந்தவன் என்னும் பொருளில் சேயோன், செவ்வேல் என்றெல்லாம் குறிப்பிடுவர்.

காலப்போக்கில் சூரியன் மட்டுமில்லாமல் மலை, காடு, அருவி என்று இயற்கை அழகுக் காட்சிகளையெல்லாம் முருகனாகவே போற்றி வழிபட்டனர்.

அதைத்தான் அழகெல்லாம் முருகனே என்று குறிப்பிடுகிறோம்.