ஆன்மிக களஞ்சியம்

அசரவைக்கும் அபிராமி அழகு

அன்னையின் அழகுத் தோற்றத்தை லலிதா சகஸ்ர நாமமும், சௌந்தர்ய லகரியும், கேசாரி பாதாந்தம் வர்ணிக்கின்றன. வாமா என்றால் அழகு என்ற பொருள். "வாமி" என்றால் அழகி என்று பொருள்.

திருக்கடவூரில் தேவியை அழகு என சொல்லத்தக்க வகையில் "அபிராமி" எனும் அழகுப்பெயர் கொண்டு அன்னை திகழ்கிறாள்.

"அபிராமி" என்றால் "அழகு" என்று பொருள்.

"அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வலில்" என்று அபிராமி பட்டர் பாடுவார்.

அன்னையின் அழகுத் தோற்றத்தை லலிதா சகஸ்ர நாமமும், சௌந்தர்ய லகரியும், கேசாரி பாதாந்தம் வர்ணிக்கின்றன.

வாமா என்றால் அழகு என்ற பொருள்.

"வாமி" என்றால் அழகி என்று பொருள். சிவபெருமானின் வாம பாகத்தில் விளங்குவதாலும் "வாமி" ஆவாள்.

மங்களமான அழகை உடைய திரிபுரசுந்தரியை அபிராமியின் வடிவில் பட்டர் கண்டு மகிழ்கிறார்.

17 நிர்வாகம்

இது தருமை ஆதீனத்தைச் சேர்ந்த தேவஸ்தானங்களில் ஒன்று.

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் இருபத்தாறாவது குருமகா சந்திதானம் ஸ்ரீ&ல&ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் ஆட்சிபீடத்தை ஏற்ற நாள் முதல் இவ்வாலயத்தைச் சிறப்புறப் பரிபாலித்து வருகிறார்கள்.