ஆன்மிக களஞ்சியம்

அம்மனின் சிலை உருவம்

அம்மனின் சிலை உருவம், சுமார் மூன்றடி அகலமும் இரண்டரை அடி உயரமும் உடையது.நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலமுடையது.

மாலை மலர்

கோசர் ஆட்சி மறைந்த பின், சில காலம் கோவிலில் பூசை இல்லாமலிருந்ததால் அதன்பின்,

கொங்கு நாட்டை கைப்பற்றிய மைசூர் அரசர்களில் ஒருவர் கோவில் பூசையின்றி இருப்பதை கண்டு மனம் நொந்து,

மகிஷாசுவர்த்தினிபோல் ஒர் கற்சிலையை உருவாக்கி ஆகம விதிப்படி அச்சிலையை கோவிலின் மூலஸ்தானத்தில் கோவில் கொள்ள செய்தார்.

அரசர்கள் தமது ஆட்சிக்காலத்தில் கோனியம்மனுக்கு மானியமாக பூமிகள் விட்டும்,

தேர்த்திருவிழாவும், பூசையும் தப்பாமல் நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்து வந்தனர்.

மூலத்தானத்தில் வடக்கு பார்த்து கோவில் கொண்டுள்ள அம்மனின் சிலை உருவம், சுமார் மூன்றடி அகலமும் இரண்டரை அடி உயரமும் உடையது.

அம்மனது தோற்றம் முகத்தில் மூண்ட கோபமும், உக்கிரமான பார்வையும் தம்முடன் எதிர்த்து சண்டையிட வந்த

கொடிய துட்டனை தேவி அவன் பலத்தையடக்கி வீரவாளால் சிரத்தை வெட்டி வீழ்த்தி

வீரவாகை சூடியது போல் விளங்குகின்றது.

மர்த்தினியின் வலக்கைகள் நான்கிலும் சூலமம், கபாலம், அக்னி, சக்கரம், மணி ஆகிய 4 ஆயுதங்களும் உள்ளன.

உலா வரும் அம்மனின் திருமேனி வலக்கரங்களில் சூலம், வாள், இடத்திருக்கரங்களில் உடுக்கை, அக்னி எனத்தாங்கி

நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலமுடையது.

மூலத்தான திருவுருவத்தில் இடச்செவியிலே தோடும், வலச்செவியிலே குண்டலமும் காணப்படுவதால்

கோனியம்மன் ஏனைய சாதாரண சக்தியன்று, அர்த்தநாரீஸ்வரர் தொடர்பு கொண்ட வீரசக்தியும் ஆவாள்.

கோசர்களால் பிரதிட்டை செய்ய பெற்ற கோனியம்மன் சிலை தமிழக சிற்ப சம்பிரதாயத்தை ஒட்டி சித்தரிக்க பெற்றது.

அத்திருவுருவம் பராசக்தியின் பலகோடி உருவங்களில் ஒரு வகையை சார்ந்திருந்தது.

சிரசில் கிரீடமும், ஆயுதங்களேந்திய நான்கு திருக்கரங்களும், அழகமைந்த திருமேனியும் நின்ற கோலமாயும்

விளங்கிய அச்சிலை, கோசர் ஆட்சிக்கு பின்னர், படையெடுப்பு, நாடு கவரும் ஆசை, மதவெறி போன்ற

பல காரணங்களால் துண்டிக்க பெற்று மேற்பாகத்து சிரசு மட்டும் இன்னும் இன்றும் ஆலயத்தின் மேற்புறத்தில்

ஆதிகோனியம்மன் என்ற பெயரில் அருளழுகும் அளவிலா அழகு ததும்பும் மாகாளியம்மன் சிலையுடன்

சப்த கன்னியர்களுடன் வைக்கப்பெற்று நித்தியபடி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது.