ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் தலத்தில் நந்திதேவர் அவதரித்தார் என்றும், தமிழகத்தில் திருவையாறில் நந்திதேவர் அவதரித்ததாகவும் இருவேறு கருத்துகள் உண்டு.
பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரம் இவரது அவதார தினம். எனவே அன்று நந்திதேவர் ஜனன உற்சவம் இத்தலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும். அவை பத்மநந்தி, நாகநந்தி, விநாய நந்தி, மகாநந்தி, சோமநந்தி, சூரியநந்தி, கருடநந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தியாகும்.
இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் தலங்களில் தரிசிக்கலாம்.