ஆன்மிகம்

27 நட்சத்திரங்களும்.. அதி தேவதைகளும்..

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மாலை மலர்

ஜோதிடத்தில் பன்னிரண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ, அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றிய தகவலை இங்கே பார்க்கலாம்.

அஸ்வினி - சரஸ்வதி தேவி

பரணி - துர்கா தேவி (அஸ்ட புஜம்)

கார்த்திகை - முருகப்பெருமான்

ரோகிணி - கிருஷ்ணன்

மிருகசீரிஷம் - சிவபெருமான்

திருவாதிரை - சிவபெருமான்

புனர்பூசம் - ராமர்

பூசம் - தட்சிணாமூர்த்தி

ஆயில்யம் - ஆதிசேஷன்

மகம் - சூரிய பகவான்

பூரம் - ஆண்டாள்

உத்திரம் - மகாலட்சுமி

ஹஸ்தம் - காயத்திரி தேவி

சித்திரை - சக்கரத்தாழ்வார்

சுவாதி - நரசிம்மமூர்த்தி

விசாகம் - முருகப்பெருமான்

அனுசம் - லட்சுமி நாராயணர்

கேட்டை - வராஹ பெருமாள்

மூலம் - ஆஞ்சநேயர்

பூராடம் - ஜம்புகேஸ்வரர்

உத்திராடம் - விநாயகப் பெருமான்

திருவோணம் - ஹயக்ரீவர்

அவிட்டம் - அனந்த சயனப் பெருமாள்

சதயம் - மிருத்யுஞ்ஜேஸ்வரர்

பூரட்டாதி - ஏகபாதர்

உத்திரட்டாதி - மகா ஈஸ்வரர்

ரேவதி - அரங்கநாதன்

அந்தந்த நட்சத்திரத்திற்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.