Recap 2024

2024 ரீவைண்ட்: உலகையே பிரமிப்பில் ஆழ்த்திய ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணம்

திருமணத்துக்கு ரூ.5,000 கோடி செலவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.திருமணத்துக்கு முன்னதாக, சொகுசு கப்பலில் பிரம்மாண்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

மாலை மலர்

மும்பை:

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ர்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

4 மாதமாக நட்சத்திரங்கள், பிரபலங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு ஜூன் மாதம் இனிதே திருமணம் நடந்தது.

இவர்களின் திருமணத்தின் விருந்தினர் பட்டியலில் இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் ஏராளமானோர் வருகை தந்து புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி, நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான்கான், ஷாருக்கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், கியாரா, அத்வானி, சன்னி தியோல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். டபிள்யூடபிள்யூஎப் குத்துச்சண்டை வீரரும் நடிகருமான ஜான் சீனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அம்பானியின் சொந்த ஊரான குஜராத்தின் ஜமாநகரில் திருமணத்திற்கு முந்தைய 3 நாள் நிகழ்வில் மெட்டாவின் மார்க் ஜூக்கர்பெர்க், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ், ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் ப்ஹாய் உள்பட சுமார் 1,200 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

திருமண நிகழ்வின் ஒரு பகுதியாகஆனந்த் அம்பானி சார்பில் 50 பேருக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணத்துக்கு முன்னதாக, சொகுசு கப்பலில் பிரம்மாண்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

திருமணத்தில்பங்கேற்ற தனது நண்பர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கினார்.

ஆனந்த் அம்பானியின் இந்தத் திருமணத்துக்கு சுமார் ரூ.5,000 கோடி செலவானதாக தகவல் வெளியானது.