மனிதனின் மனம் ஒன்று தான். ஆனால் உணர்வுகளுக்கு எண்ணிக்கை கிடையாது. மனதின் உணர்வுகளை புரிந்து கொள்ள மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. உணர்வு மனம்: நாம் செய்யும் வேலைக்கு ஏற்றார் போல் உணர்வை மாற்றிக் கொள்வது உணர்வு மனம். உதாரணமாக புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைத்தவுடன் மனம் படிக்கும் உணர்வுக்கு மாறுவது.
2. அடி மனம்: ஒருவரின் இயல்பான மனதை குறிப்பிடுவது. இதை ஒருவரின் உண்மையான சொரூபம் என்றும் சொல்லலாம். ஒருவரின் அடிமனத்தின் குணங்கள் உணர்வு மனத்தோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இது ஒருவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே வெளிப்படுத்த வைக்கும்.
3. ஆழ்மனம்: ஒருவரின் உண்மையான பலம், பலவீனத்தை ஆழ்மனமே தெரிவிக்கும். ஆழ்மனதை உணர்வு மனமும், அடி மனமும் சாதாரண நேரத்தில் செயல்பட விடாது. ஒருவரின் ஆழ்மனம் செயல்படும் போது மட்டுமே நாம் யார்? ஏன் பிறந்தோம் ? எதற்காக பிறந்தோம்? என்ன செய்கிறோம்? எதை நோக்கி போக வேண்டும் போன்ற அனைத்து கேள்விக்கும் விடை பெற முடியும். ஒருவரது சஞ்சித கர்மாவின் நிலையை இந்த ஆழ் மனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.