விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் பழமையான புனித தோமையார் ஆலய தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. திருவிழாவின் 10-ம் நாளான நேற்று தேர் பவனி நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தோமையார் பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர்பவனியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ஆலயத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி போன்றவற்றை காணிக்கையாக செலுத்தினர்.