ஆரஞ்சு பர்ஃபி 
கிச்சன் கில்லாடிகள்

தித்திப்பான ஆரஞ்சு பர்ஃபி

வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ஆரஞ்சு பர்ஃபி எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

மாலை மலர்

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு பழங்கள் - 4

சர்க்கரை சேர்க்காத கோவா - 400 கிராம்

சர்க்கரை - 400 கிராம்

முந்திரி, பாதாம் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஆரஞ்சு பழங்களை உரித்து, மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி, சுளைகளை தனியாக எடுத்து வைக்கவும்.

கோவாவை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த கோவாவை அடிப்பக்கம் கனமான பாத்திரத்தில் கொட்டி அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

இந்தக் கலவையை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கலவை கெட்டியான பதத்துக்கு வரும் வரை கிளறவும்.

பின்பு அதில் ஆரஞ்சு சுளைகளைக் கொட்டிக் கிளறவும்.

இப்போது கலவை சற்றே நீர்த்து போகும். அது மீண்டும் கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும்.

கெட்டியான பதத்துக்கு வரும்போது, அதில் நெய், ஏலக்காய்த்தூள், முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி சமமாக்கவும்.

ஆறிய பிறகு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.