சென்னை:
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் முனுசாமி(வயது 29). இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது மனைவி பிரியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனம் உடைந்த பிரியா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் மாநகர குற்றவியல் அரசு வக்கீல் கவுரி அசோகன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, குற்றம்சாட்டப்பட்ட முனுசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.