உலகம்

ஹார்முஸ்-இல் சுங்க கட்டண முறை... ஓமனை மீண்டும் எச்சரித்த அமெரிக்கா!

மேலும் விருப்பமுள்ள கூட்டாளிகள் யாரேனும் இருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்க கட்டண முறையை திணிக்க உதவினால், அதன் நட்பு நாடான ஓமனைக் குறிவைப்போம் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து தரப்பினர் மீதும் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்தார்.

"குறிப்பாக ஓமன் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், ஹார்முஸ் ஜலசந்திக்கான சுங்க கட்டணங்களை எளிதாக்குவதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள எந்தவொரு தரப்பினரையும் அமெரிக்க கருவூலம் கடுமையாகக் குறிவைக்கும், மேலும் விருப்பமுள்ள கூட்டாளிகள் யாரேனும் இருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்," என்று பெசன்ட் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக ஓமன் தூதருடன் பேசியதாகவும், அந்த முக்கிய நீர்வழியில் "சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை" என்ற உறுதிமொழிகளைப் பெற்றதாகவும் பெசன்ட் வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் பின்னர் தெரிவித்தார்.

"இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும், ஓமன் தனிநபர்களோ அல்லது ஓமன் நிதி நிறுவனங்களோ தடைக்கு உள்ளாகும் அபாயத்தை அவர் எடுக்க விரும்பமாட்டார் என்றும் நான் அவரிடம் கூறினேன்," என பெசன்ட் தெரிவித்தார்.

வழக்கமாக உலகின் எரிசக்தி விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கடந்துசெல்லும் இந்த நீரிணை, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரை தொடங்கியதில் இருந்து ஒரு பதற்றமான பகுதியாக இருந்து வருகிறது.