வாஷிங்டன்:
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் தாயகமாக வெனிசுலா உள்ளது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கரீபியன் கடற்பகுதி வழியாக அவ்வப்போது ஈரானுக்கு கச்சா எண்ணெய் கடத்தி செல்லப்படுகிறது. இதன்மூலம் அங்குள்ள பயங்கரவாதிகள் வருவாய் ஈட்ட உதவுவதாக வெனிசுலா மீது அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. இதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஈரானுக்கு கச்சா எண்ணெய் கடத்தி செல்ல அமெரிக்கா தடை விதித்தது. அதனை மீறி வெனிசுலாவில் இருந்து ஈரானுக்கு கச்சா எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. இதனை அமெரிக்க கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இந்தநிலையில் கச்சா எண்ணெய் கடத்தலுக்கு உதவிய வெனிசுலா அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனம் மற்றும் 6 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.