உலகம்

மீண்டும் ஈரான் மீதான தாக்குதல்களை தொடங்கியது அமெரிக்கா

மேலும் அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை தொடர்கிறது.

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படை வீரர்கள் மீதும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல் முயற்சிகளை தொடர்ந்து, ஈரான் மீதான தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்கு, அமெரிக்க படைகள் ஈரானில் உள்ள ஐ.ஆர்.ஜி.சி. இலக்குகள் மீது தாக்குதலை தொடங்கின என்று அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

எக்ஸ் தள பதிவு:

"இன்று கிழக்கு நேரப்படி மதியம் 12 மணிக்கு, அமெரிக்க படைகள் ஈரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் (IRGC) இலக்குகள் மீது தாக்குதலை தொடங்கின.

ஹார்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்கள் மீதும், அப்பகுதியில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்க படை வீரர்கள் மீதும் IRGC சமீபத்தில் நடத்திய தாக்குதல் முயற்சிகளை தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன," என்று அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

ராக்கெட் ஏவுதளங்கள் மீது தாக்குதல்:

ஆறு மாத கால போருக்கு பிறகும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டே உள்ளது, மேலும் அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை தொடர்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பல வாரங்களுக்கு பிறகு அமெரிக்கா ஈரான் மீது தனது முதல் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானிய தீவு ஒன்று தாக்கப்பட்டது.

கப்பல் போக்குவரத்து பாதையில் இஸ்லாமிய குடியரசு மேலும் கண்ணிவெடிகளை புதைப்பதை தடுப்பதற்காக, லராக் தீவில் உள்ள ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது தங்கள் படை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியது.