இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (திங்கட்கிழமை) ராஜினாமா செய்கிறார். 2016-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதில் இருந்து 6 பிரதமர்களும், 2022-ம் ஆண்டு தொடங்கி 4 பிரதமர்களும் ராஜினாமா செய்தனர்.
தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று மன்னர் சார்லசை சந்தித்துத் தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை வழங்குகிறார்.
அதைத் தொடர்ந்து, ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவரான ஆண்டி பர்ன்ஹாமை மன்னர் சந்திக்கிறார். புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு அவருக்கு மன்னர் முறைப்படி அழைப்பு விடுப்பார்.
புதிய பிரதமர் மன்னரின் கையை முத்தமிட்டுத் தனது விசுவாசத்தை உறுதிப்படுத்துவதை தொடர்ந்து அதிகாரப்பூர்வமாகப் பிரதமராக அறிவிக்கப்படுவார்.
அரண்மனையிலிருந்து வெளியேறியவு டன், புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் லண்டனில் உள்ள அதிகாரப் பூர்வ பிரதமர் இல்ல (10 டவுனிங் தெரு) வாசலில் நாட்டு மக்களுக்குத் தனது முதல் உரையை நிகழ்த்துகிறார்.