ஹார்முஸ் நீரிணையில் தெஹ்ரான் கப்பல்களை தொடர்ந்து தாக்கினால், ஈரான் மீதான அமெரிக்காவின் குண்டுவீச்சு கணிசமாக அதிகரிக்கும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்தார்.
"இது, ஈரான் நேற்று கப்பல்கள் மீது நடத்திய குண்டு தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கை. இது மீண்டும் நடந்தால், நிலைமை இன்னும் மிகவும் மோசமாக இருக்கும்!" என்று அமெரிக்க அதிபர், ஈரானில் உள்ள ஒரு இடத்தில் நடந்ததாக தோன்றும் குண்டுவெடிப்பு புகைப்படத்தின் கீழ் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது, செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் அந்த தகவலை மீண்டும் வலியுறுத்தினார்.
"நாங்கள் அவர்களை மிக கடுமையாக தாக்கினோம், நான் சொல்வது என்னவென்றால், நாங்கள் அவர்களை 20-க்கு 1 என்ற விகிதத்தில் தாக்கினோம். அவர்கள் எங்களை தாக்கும் ஒவ்வொரு முறையும், நாங்கள் அவர்களை 20 மடங்கு தாக்குவோம்.
நேற்றிரவு நாங்கள் அதைச் செய்தோம். அவர்கள் இன்று சிறிதளவு தாக்கினார்கள், ஆனால் அது உண்மையில் நேற்றிரவு நடந்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகும்," என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.