காலாவதியாக இருக்கும் நிலையற்ற போர்நிறுத்தத்தை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க கோரி லெபனான் முயன்று வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமைதி பேச்சுவார்த்தையின் போது லெபனான் மற்றும் இஸ்ரேலிய தூதர்களை சந்திக்கிறார்.
பரந்த பிராந்திய போர் தொடர்பாக ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்கு இணங்க வைப்பதில் டிரம்ப் திணறி வரும் நிலையில், ஹிஸ்புல்லாவின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் குண்டுவீசி தாக்கியுள்ள லெபனான் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என அமெரிக்கா நம்புகிறது.
கடந்த வாரம் நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தையை போலவே, முன்னதாக அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள், வெள்ளை மாளிகைக்கு மாற்றப்பட்டன.
"இரு பிரதிநிதிகளும் வந்தவுடன் அதிபர் டிரம்ப் அவர்களை வரவேற்பார்," என பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, லெபனான் அரசாங்கத்துடன் எங்களுக்கு "கடுமையான கருத்து வேறுபாடுகள்" எதுவும் இல்லை, பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்காமலும், அதனை எதிர்த்தும் வரும் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக "ஒன்றிணைந்து செயல்படுங்கள்" என்று இஸ்ரேல் லெபனான் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது.