உலகம்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பெரிய தாக்குதலை நடத்த போகிறதா? AI பதிவால் பரபரப்பு

ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம் நீடிக்கின்ற நிலையில் டிரம்ப் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து தனது உயர்மட்ட உதவியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கை இல்லாததை "புயலுக்கு முந்தைய அமைதி" என்று வர்ணித்து, ஒரு மறைமுக அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

அவரது சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஒரு படத்தில், டிரம்ப் 'மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்' தொப்பியை அணிந்திருக்க, அவருக்கு அருகில் ஒரு அமெரிக்க கடற்படை அட்மிரல் நிற்பது காணப்படுகிறது.

அந்தப் படத்தில், பின்னணியில் ஈரானியக் கப்பல்கள் தெரிய, ஒரு அமெரிக்க கடற்படைக் கப்பலில், கொந்தளிப்பான கடல் மற்றும் மின்னலுக்கு மத்தியில் அவர்கள் இருவரும் காணப்படுகின்றனர்.

"இது புயலுக்கு முந்தைய அமைதி" - இந்தப் படத்துடன் பகிரப்பட்ட செய்தி ஈரானுக்கான ஒரு எச்சரிக்கையாகக் கருதப்படலாம். ஏனெனில், ராணுவ பலத்தின் மூலம் இராஜதந்திர முட்டுக்கட்டையை உடைக்க அவர் முடிவு செய்தால், வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை அவரது உயர்மட்ட உதவியாளர்கள் வகுத்து வருவதால், ஈரான் குறித்து டிரம்ப் ஒரு முக்கியமான முடிவை எடுக்கவிருக்கிறார் என்று கருத்துகள் வெளியாகியுள்ளது.