இளவரசர் பிலிப் 
உலகம்

இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் இளவரசர் பிலிப்.

மாலை மலர்

லண்டன்:

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கனவர் இளவரசர் பிலிப் (99), கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு வின்ட்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவரது இறுதிச்சடங்கிற்கு 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இளவரசர் பிலிப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ராணி எலிசபெத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இளவரசர் பிலிப்புக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படியுங்கள்...உக்ரைனுடனான போரில் ரஷியா தோல்வியடைவதை பார்க்க விரும்புகிறோம் - அமெரிக்கா