மாடர்னா தடுப்பூசி 
உலகம்

2-வது டோஸ் செலுத்தி 5 மாதங்களுக்கு பின்னர் மாடர்னா தடுப்பூசிக்கு அதிக செயல்திறன்

மாடர்னா தடுப்பூசியை செலுத்திய 3 லட்சத்து 52 ஆயிரத்து 878 பேருடன், தடுப்பூசி போடாத அதே எண்ணிக்கையிலான நபர்களை ஒப்பிட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

மாலை மலர்

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான மாடர்னா தடுப்பூசியின் 2-வது டோசை செலுத்தி 5 மாதங்கள் ஆன நிலையில் அது தொற்று பாதிப்பை தடுப்பதில் 87 சதவீத செயல்திறனை கொண்டுள்ளது.

நோயின் தீவிரத்துக்கு எதிராக 95 சதவீத பாதுகாப்பை கொண்டுள்ளது.

மரணத்துக்கு எதிராக 98 சதவீத செயல்திறனை பெற்றிருக்கிறது.

இதன் முடிவுகள் ‘லேன்செட்’ மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்...பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை: கனடா நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது