உலகம்

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக அடுத்த வாரம் சீனா பயணம்

இலங்கை அதிபர் அனுர திசநாயக 3 நாள் பயணமாக சீனா செல்கிறார்.வரும் 14ம் தேதி தனது பயணத்தை தொடங்குகிறார் என தெரிவித்தார்.

மாலை மலர்

கொழும்பு:

இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுர குமார திசநாயக அந்நாட்டு புதிய அதிபராக பதவியேற்றார்.

இலங்கை அதிபராக பதவியேற்ற அனுர குமார திசநாயகவுக்கு இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

இதற்கிடையே, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக கடந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதிபர் பதவியேற்றதும் அனுர திசநாயக பயணித்த முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர திசநாயக அடுத்த வாரம் சீனா செல்ல உள்ளார் என அந்நாட்டு அமைச்சர் நலிந்த ஜெயதிசா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை அதிபர் அனுர திசநாயக 3 நாள் பயணமாக வரும் 14ம் தேதி சீனா செல்ல உள்ளார் என தெரிவித்தார்.