உலகம்

இலங்கை அதிபர் தேர்தல்- விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை

தேவை ஏற்பட்டால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தயார் என அறிவிப்பு.தேர்தல் முடிவுகளை பார்ப்பதற்காக பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்த நிலையில், தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இலங்கை அதிபர் தேர்தல் வெற்றி நிலவரம் இரவு 10 மணிக்குள் தெரிய வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

தேவை ஏற்பட்டால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தயார் எனவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் முடிவுகளை பார்ப்பதற்காக பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, அனுர குமார திசாநாயக்க, நமல் ராஜபக்சே, சஜித் பிரேமதாசா உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.