உலகம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது - இலங்கை கடற்படை அராஜகம்

இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீன்வர்களை கைது செய்தது. மீனவர்களின் விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டன.

மாலை மலர்

தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்தது.

மேலும், மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.