இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டதன் 81வது ஆண்டு விழா வரும் மே 9 அன்று கொண்டபாடப்படுகிறது.
இந்நிலையில் மே 8,9 ஆகிய இரு தினங்களுக்கு உக்ரைனுடனான போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்தம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ரஷியா- உக்ரைன் இடையேயான போர் நிறுத்தத்தை மேலும் 3 நாட்கள் நீட்டித்து கடைபிடிக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் மே 9 முதல் மே 11 வரை மூன்று நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ரஷியாவும் உக்ரைனும் ஒப்புக்கொண்டதாக உறுதிப்படுத்தின.
நாஜிக்களுக்கு எதிரான சோவியத் யூனியன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இருதரப்பும் தலா 1000 போர்க் கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.