உலகம்

பொருளாதார தடை மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தால் பூமராங் போல் திரும்பி தாக்கும்: அதிபர் புதின்

இந்​தியா தனது நாட்டு நலனை கருத்​தில் கொண்டு முடிவு​களை எடுக்​கிறது என்றார் அதிபர் புதின்.

சர்​வ​தேச பொருளா​தார கூட்​டமைப்பு சார்பில் ரஷி​யா​வின் செயின்ட் பீட்​டர்ஸ் சதுக்​கத்​தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ரஷிய அதிபர் புதின் கலந்துகொண்டு பேசினார். அப்போதுஅவர் கூறி​ய​தாவது:

இந்​தியா தனது நாட்டு நலனை கருத்​தில் கொண்டு முடிவு​களை எடுக்​கிறது.

ரஷி​யா​வுடன் உள்ள உறவு​கள் காரண​மாக அழுத்தங்களைச் சந்​தித்​தா​லும் இந்​தியா தொடர்ந்து தனது நாட்டு நலனைக் கருத்​தில் கொண்​டு​தான் செயல்​படும்.

இந்​தியா எப்​போதும் இறை​யாண்​மைமிக்க நாடாக செயல்​படு​கிறது.

அதற்​குக் காலத்​துக்கு ஏற்ற தனது தேவை​கள் மற்​றும் பொருத்​த​மானவற்​றைத் தேர்ந்​தெடுக்க முழு சுதந்​திரம் உள்​ளது.

அதற்கு தடைகள் விதிக்​கப்​படும் என அச்​சுறுத்​தல் விடுக்​கப்​பட்​டால், அது பிரதமர் மோடி தலை​மை​யின் கீழ் பூம​ராங் போல் திரும்​பும்.

இந்​தி​யா​வுட​னான எங்​கள் ஒத்​துழைப்​பு, நாங்​கள் மற்ற நாடு​களு​டன் கொண்​டிருப்​பது போல் எப்​போதும் இருக்​கும். இந்​தி​யா​வுடன் செய்து கொண்ட ஒப்​பந்​தப்​படி ரஷியா தொடர்ந்து செயல்​படும் என தெரிவித்தார்.