ஈரானுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்துச் செல்லும் என்றும், "ஈரானின் பயங்கரவாத ஆட்சியை தொடர்ந்து நசுக்கும்" என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாயன்று தெரிவித்தார்.
"இந்தப் பிரச்சாரம் இன்னும் முடிவடையவில்லை. பயங்கரவாத ஆட்சியை நாங்கள் தொடர்ந்து நசுக்குவோம்," என்று அவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கையில் கூறினார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தனது நாட்டிற்குத் "தேவையான உறுதிப்பாடு" உள்ளது என்றும், ஆனால் இந்த மோதல் மீண்டும் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதங்களை கோருவதாகவும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறிய சிறிது நேரத்திலேயே நெதன்யாகுவின் கருத்துக்கள் வெளிவந்தன.
யூதர்களின் பாஸ்கா பண்டிகைக்கு முந்தைய நாள் வெளியிட்ட தனது அறிக்கையில், நெதன்யாகு, "நாங்கள் செயல்பட வேண்டியிருந்தது, நாங்கள் செயல்பட்டோம். நாங்கள் எங்கள் இலட்சியத்தில் உறுதியாக இருந்து, மத்திய கிழக்கின் முகத்தையே மாற்றியுள்ளோம்," என்று கூறினார். தொடர்ந்து போர் நடந்துவந்தபோதிலும் இஸ்ரேல் ஒரு "பிராந்திய சக்தியாக" உருவெடுத்துள்ளது என்றும் உறுதிப்படுத்தினார்.