வாஷிங்டன்:
அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக நாசா உள்ளது. நிலவை குறிக்கோளாக கொண்டு அதன் லட்சிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இந்தாண்டுக்குள் மனிதர்கள் நிலவுக்கு கொண்டு செல்லும் ஆர்கிமெடிஸ்-2 திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
இதற்கான அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தநிலையில் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிலவை சுற்றி விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்க நாசா திட்டமிட்டிருந்தது.
தற்போது அந்த திட்டத்தை கைவிடுவதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக நிலவில் நாசாவுக்கான நிரந்தரமான ஆராய்ச்சி மையத்தை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக அரசு சார்பில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி (20 பில்லியன் டாலர்கள்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 2030-க்குள் இதனை அமைக்கவுள்ளதாக அதன் தலைவர் ஜேரட் ஐசன்மேன் தெரிவித்தார்.