உலகம்

லெபனானில் இயேசு கிறிஸ்து சிலையை அடித்து உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர் - வலுக்கும் கண்டனம்

இந்தச் செயல் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் விழுமியங்களுக்கு எதிரானது என்று அதன் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடவ் ஷோஷானி தெரிவித்துள்ளார்.

லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே, இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையினைச் சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்தும், இது சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.