அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் தேக்க நிலை ஏற்பட்டிருந்தபோதிலும், மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல் குறித்து விவாதிப்பதற்காக, ஈரான் குழு ஒன்று ரஷ்யாவிற்குப் பயணம் செய்து அதிபர் புதினை சந்தித்தது.
இந்த பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான "மூலோபாய உறவை" காட்டுகின்றன என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன, அதே நேரத்தில் அவரது ரஷ்ய பிரதிநிதி இந்த விவாதங்களை "பயனுள்ளவை" என்று கூறியுள்ளார்.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வார இறுதியில் பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிகாரிகள் மேற்கொள்ளவிருந்த பயணத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்ததை தொடர்ந்து இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையிலான போர்நிறுத்தம் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, மேலும் மோதல் தொடங்கியதில் இ ருந்து இறப்பு எண்ணிக்கை இப்போது 2,521 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.