உலகம்

அமெரிக்க கல்லூரியில் பட்டம் பெற்ற 202 மாணவர்களின் கடனை அடைத்த இந்தியர்!

மாணவ மாணவியர் அனைவரும் சுதந்திர பறவைகளாக பறக்க வேண்டும்.

அமெரிக்காவின் ஒரு கல்லூரியில் விருந்தினராக பங்கேற்ற தொழில​திபர் அனில் கோச்​சார் என்பவர் 202 மாணவர்களுக்கான கல்விக்கடனை அடைந்துள்ளார்.

அமெரிக்கா​வின் வடக்கு கரோலினா மாகாணம், ராலீ நகரில் வில்​சன் காலேஜ் ஆப் டெக்​ஸ்​டைல்ஸ் கல்லூரியில் ஜவுளி தொடர்​பான பாடங்கள் கற்​பிக்​கப்​படு​கின்​றன.

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி அந்த கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்று வந்தது.இந்த விழா​வில் இந்​திய வம்​சாவளி தொழில​திபர் அனில் கோச்​சார் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றார். 

விழாவில் பேசிய அவர் இன்று இளநிலை பட்​டம் பெற்ற 176 பேர் மற்​றும் முது​நிலை பட்​டம் பெற்ற 26 பேர் என மொத்​தம் 202 மாணவ, மாணவியரின் ஒட்​டுமொத்​த​மாக ரூ.76.18 கோடி கடனை தாம் அடைப்பதாக உறுதியளித்து அதற்கான தொகையையும் அளித்தார்.

என் தந்தை பிர​காஷ் கோச்​சார் குஜராத்திலிருந்து அமெரிக்கா வந்து குடியேறினார். அப்போது 1950 ஆம் இதே கல்லூரியில் பட்டம் வென்றார் என்பதை நன் பெருமையுடன் இந்த இடத்தில தெரிவித்து கொள்கிறேன் என்றும், அவர் இல்லையென்றாலும் அவர் படித்த கல்லூரியில் நான் சிறப்பு விருந்தினராக வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி என்று கண்கலங்கி உரையாடினார்.

என் தந்தையின் நினைவாக நான் இந்த கடனை அடைகிறேன் என்றும் தெரிவித்தார்.

இதனால் நானும் ஏன் குடும்பமும் இந்த கல்லூரிக்கு கடன்பட்டிருக்கிறோம். இங்கு படிக்கும் மாணவ மாணவியர் அனைவரும் சுதந்திர பறவைகளாக பறக்க வேண்டும் என பெருமையுடன் கூறினார்.

இந்திய தொழிலதிபர் அனில் கோச்​சா​ருக்கு மாணவ, மாணவியர்களும், கல்லூரி நிர்வாகம் சார்ந்த அனைவரும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

அனில் கோச்​சாரை  நியூ​யார்க் டைம்​ஸ் உட்பட அமெரிக்​கா​வின் முன்னணி ஊடகங்கள் போன்ற அனைவருமே பாராட்டி செய்திகளை வெளியிட்டுள்ளனர்.