வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், 7 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஈரானுடனான போரில் 140 அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக பென்டகன் கூறும்போது, ஈரானுடனான கடந்த 10 நாட்கள் மோதலில் சுமார் 140 அமெரிக்கப் படைவீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தக் காயங்களில் பெரும்பான்மையானவை லேசானவை ஆகும். 8 வீரர்கள் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவித்தது.