செய்திகள்

நடையனூர் அருகே தொழிலாளி தற்கொலை

நடையனூர் அருகே ரெயில் முன்பு பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம் நடையனூர் அருகே ஆலமரத்து மேட்டை சேர்ந்தவர் மருதமுத்து (34). இவர் புகளுர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார். இவர் சம்பவதன்று புகளுர் அருகே ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அவர் எதற்காக தற்கொலை செய்து  கொண்டார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.