செய்திகள்

பென்னாகரம் அருகே மயங்கி விழுந்து தொழிலாளி மரணம்

பென்னாகரம் அருகே ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்த தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதையன் (வயது60). இவர் ஆடு மேய்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல் ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மாதையனுக்கு திடீரென மயக்க ஏற்பட்டு மயங்கி கிடந்தார். 

இதை பார்த்த குடும்பத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். 

இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.