கலெக்டர் பிரவீன்நாயர் 
செய்திகள்

நாகை மீன்பிடி துறைமுகத்தில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி- கலெக்டர் ஆய்வு

நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்று வரும் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாலை மலர்

நாகை மீன்பிடி துறைமுகத்தின் முகப்பு பகுதியில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிக்கான வரைபட மாதிரியை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

எனவே கழிவு நீரை முழுவதுமாக வெளியேற்றும் வகையில் வடிகாலை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கழிவுநீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக இந்த பகுதியில் சுகாதாரம் மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் பிரசாந்த், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.