நடால் 2011-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவருக்கு அதிக தொந்தரவு கொடுக்கும் வீரராக கருதப்பட்ட ரோஜர் பெடரர் காலிறுதியில் ஆண்டர்சனிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
இதனால் நடால் சாம்பியன் பட்டம் வெல்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நடால் அப்படி பார்க்கவில்லை ‘‘நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்வது எப்போதும் மிகப்பெரிய சவாலானது’’ என்று தெரிவித்துள்ளார்.