செய்திகள்

உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு - யுவராஜ் சிங்

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு குறித்து அறிவிப்பேன் என்று முன்னணி வீரரான யுவராஜ் சிங் கூறியுள்ளார். #YuvrajSingh #KXIP

மாலை மலர்

இந்த நிலையில் யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘2000-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடி வருகிறேன். ஏறக்குறைய 17 முதல் 18 ஆண்டுகளாக விளையாடி உள்ளேன். நிச்சயமாக 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு எடுப்பேன்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த முறை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவானதாக உள்ளது. எங்கள் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதுடன் கோப்பையையும் வெல்ல முடியும் என்று நம்புகிறேன். 20 ஓவர் போட்டியில் முடிவுகளை கணிக்க முடியாது.