ஊட்டி:
ஊட்டியில் கள்ளக்காதலியுடன் கணவன் பேசியதால் ஆத்திரமடைந்த மனைவி நடுரோட்டில் காலணியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேரிங்கிராஸ் பகுதியில் பகதூர் சிங் என்பவர் தனது கள்ளகாதலி ஆதயாவுடன் பேசிகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி லக்சிமா கணவரின் செயலை கண்டு ஆத்திரமடைந்தார்.
கள்ளக்காதலியை காலணியால் தாக்கிய மனைவியை பகதூர் சிங் தடுக்க முயன்றார். ஆனாலும் கள்ளக்காதலி அதயாவுக்கு பலத்த அடி விழுந்தது. அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.