சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, மகாராஷ்டிரா சட்டசபையில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
மும்பையில் செய்தியாளர்கள் மத்தியில் இன்று பிற்பகல் இந்த முடிவை அறிவித்த பட்னாவிஸ், எம்.எல்.ஏ.க்களை வாங்கும் குதிரை பேரத்தில் விருப்பம் இல்லாததால் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டார்.
எங்களுக்கு முதல் மந்திரி பதவி அளிக்கும் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்று தேர்தலுக்கு முன்னரே சிவசேனா
தெரிவித்திருந்தது.