இந்தியா இங்கிலாந்துக்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக இந்திய அணி கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து சென்று கவுன்டி போட்டியில் விளையாட இருக்கிறார்.
இந்தியாவின் முன்னாள் வீரர்கள் பலர் விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் விளையாட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஏற்கவில்லை.
இந்நிலையில் நாங்கள் இந்தியாவிற்கு எதிராகத்தான் விளையாடுகிறோம். விராட் கோலிக்கு எதிராக அல்ல என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்சாய் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்சாய் கூறுகையில் ‘‘அனைத்து இந்திய வீரர்களும் சிறந்த வீரர்கள். ஒவ்வொரு வீரர்களும் விராட் கோலியை போன்றவர்கள். நாங்கள் இந்தியாவுடன்தான் விளையாடுகிறோம், விராட் கோலியை எதிர்த்து இல்லை என்பதை நான் நம்புகிறேன்.