செய்திகள்

தமிழக இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை: ராஜஸ்தான் போலீஸ் எஸ்.பி

தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொன்ற விவகாரத்தில் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்ட எஸ்.பி தீபக் பார்கவ் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. நகைக்கடையின் மேல் தளத்தில் வாடகைக்கு இருந்த கொள்ளையர்கள், நகைக்கடையில் துளையிட்டு 3.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தனர்.

நகைக்கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சென்ராம், கோலாராம், சங்கர்லால், தவ்ராம் ஏற்கனவே கைது செய்யப்படுள்ள நிலையில், நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோரை பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்திற்கு தமிழக போலீசார் சென்றனர்.  

பாலி மாவட்ட எஸ்.பி தீபக் பார்கவ்