ராயபுரம்:
வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி கல்லூரி விடுதி, பழைய சிறைச்சாலை சாலையில் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.
நேற்று நள்ளிரவு கல்லூரி விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் அடுத்தடுத்து 2 அறைகளில் இருந்த லேப்- டாப், செல்போன்களை திருடி சென்றுவிட்டனர்.