பிபிசி செய்தி நிறுவனத்தின் வனவிலங்குகள் குறித்த பெண் செய்தியாளரும், உயிரியல் வல்லுநருமான லிசி டேலி என்பவர் இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு கடற்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். லிசி டேலி, கடலுக்கு அடியில் நீந்தி கொண்டிருந்த போது ஆளுயர ஜெல்லி மீன் ஒன்று அவரை கடந்து சென்றது. லிசி டேலியுடன் சென்றிருந்த ஒளிப்பதிவாளர் அதனை தத்ரூபமாக படம் பிடித்தார்.